world

img

தென் ஆப்பிரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு.

தென் ஆப்பிரிக்காவில் மத்திய ஜோகன்னஸ்பர்க் உள்ள 5 மாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு ஒன்றரை மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. முதல் மாடியில் பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் தீவிரமாக பரவியது. 5 மாடி கட்டடமே தீ பிடித்து எரிந்ததால் ஜோகன்னஸ்பர்க் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பயங்கர தீ விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 73 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தென்னாப்பிரிக்க பேரிடர் மேலாண் படையினர் 50-க்கும் மேற்பட்டோரை தீ காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதனிடையே கொழுந்துவிட்டு எறிந்த கட்டடம் இடிந்து தரைமட்டமானது. கட்டட இடிபாடுகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என ஜோகன்னஸ்பர்க் பேரிடர் மேலாண்மை படை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.